திங்கள், 18 அக்டோபர், 2010

பிரிதலின் கனமான கணங்கள்.....

                 "பிரியும் கணத்தில் , துளிர்த்த கண்ணீரை,   நான் அறியாதவனாக நினைத்து, கண்ணுக்குள் கண்ணீரை கவனமாக மறைத்தாயே, அந்தக்கண்ணீரில்   கரைந்து காணாமல் போனேனே."  அனேகமாக எனது பதின் பருவத்தில் எழுதியது  இது. யாரை பற்றி என்ற ஆராய்ச்சி இப்போது தேவை இல்லை என்றே கருதுகிறேன்.  பல காலகட்டங்களில் பல்வேறு மனிதர்களின் பிரிவுகளை சந்தித்து உள்ளேன். பிரிவின் வலி கண்டிப்பாக அனைவருக்கும் தெரியும்,சமீபத்தில் சிலரின் தற்காலிக பிரிவை சந்திக்க நேர்ந்தது அதனை பற்றி இனி...                                                                                        பி.மு மூன்றாம் நாள்:-      ஆகா இன்னும் மூணு நாளுதான் இருக்கா..?  தோழருக்கு தொலை பேசுவோமா..? இல்லை வேண்டாம் போற நேரத்தில் நிறைய ஓட்டினால் பிரிந்த பின் வலி அதிகமாகும் என்று புத்தி சொன்னதை மனது என்றுதான் கேட்டது, தோழருக்கு தொலை பேசியில் அழைத்தேன். வழக்காமான பேச்சு துள்ளலில் சற்று குறைந்ததை உணரக்கூடியதாக இருந்தது, ஒருவேளை எனக்கு அவ்வாறு தோன்றி  இருக்கலாம் இல்லை போகும் நேரத்தில் நிறைய ஓட்ட கூடாது என அவரும் என்னைப்போல் நினைத்துஇருக்கலாம்.                                                                                                                                                                                பி.மு இரண்டாம் நாள்:-   நிறைய வேலை இருந்ததால் மனதை எளிதாக புத்தி ஏமாற்றியது இன்று முழுவதும் தோழரை சந்திக்கவில்லை.                                                                    பி.மு முதல் நாள்:-     இன்றும் வேலை அதிகம்தான் மனதை எளிதாக ஏமாற்றிவிடலாம் என்று நண்பன் வீடு சென்றபோது அங்கு தோழரை கண்டவுடன் புத்தி தடுமாறியது, மனது துள்ளியது.ஓரிரு நிமிடங்கள் புத்தி வேலை செய்யாமல் இருந்தது உண்மை. அன்று நண்பன்,தோழருடன் கடைகள் சென்று பொருள் வாங்கி நண்பன் வீடு வந்தபோது நள்ளிரவு பனிரெண்டு ஆனது. தோழரை வழமையாக அவரது வீட்டில் இறக்கி விட்டு வாகனம் விடும் பரந்த வெளியில் குறைத்து ஒரு மணி நேரம் அதிகமாக கணக்கு இல்லை நிறைய நேரம் பேசிக்கொண்டு இருப்போம். உடல் அசதியை புத்தி தனது ஆயுதமாக பயன்படுத்தியது அதில்  ஓரளவு வெற்றியும் கொண்டது, நண்பன் வீட்டில் இருந்து கிளம்பும்போது தோழரை வீட்டில் இறக்கிவிட்டவுடன் உடனே திரும்பிவிட நினைத்துகொண்டேன். தோழரின் வீடு வந்ததும் ஒரு ஐந்து நிமிடத்திற்காக மனது புத்தியிடம் மன்றாடியது,முதல் முறையாக புத்தி இறக்கப்பட்டு ஐந்து நிமிடம் மட்டும் பேசுவதற்கான அனுமதி வாங்கியது. ஆனால் மனது பேசிக்கொண்டே இருந்ததில் புத்தியின் அலறல் எதுவும் அதன் காதில் விழவில்லை இறுதியாக மனது இரண்டு மணி நேரத்திற்கு மேலாக தோழருடன் பேசிக்கொண்டு இருந்தது.                                                                                                                                                                                           பிரிந்த நாள்:-  " மாடு முட்டியவனை, யானை மிதித்ததுபோல"  என்ற பழமொழியை பக்கத்து நாட்டு தோழன் அடிக்கடி சொல்வது உண்டு. பழமொழிக்கு ஏற்றாற்போல் தோழர் கிளம்பிய அதே நன்(?) நாளில் நண்பனின் குடும்பமும் விடுமுறைக்காக ஊர் செல்வதாக இருந்தது. முதல் முறையாக புத்தி மனது இரண்டும் இயங்கவில்லை.  விமான நிலையத்தில் தோழரை தழுவியபோது உள்ளே நிறைய உடைந்தது உண்மை(தழுவலின் இறுக்கத்தில் எலும்பு ஒன்றும்  உடயவில்லை மனதுதான்....!). அய்யோடா இனி தோழரை தற்காலிகமாக சந்திக்க முடியாதை நினைத்து இதயம் விம்மியதை யாராலும் அறியத்தான் முடியவில்லை. அடுத்த மூன்று மணிநேரத்தில் நண்பனின் குடும்பமும் கிளம்பியது. ஒருவழியாக யானையும் மிதித்து முடிந்தது. தோழர் பிரிவின்போது பிரிவை பற்றி ஒரு குறுஞ்செய்தி ஆங்கிலத்தில் அனுப்பி இருந்தார் அவர் தமிழில் அனுப்பிஇருந்தாலும்புரிந்துகொள்ளும்மனநிலையில்இல்லைநான்என்பதேஉண்மை.                                                                                                                         பி.பி.முதல்நாள்:-    நல்லபடியாக ஊர்சென்றதாக நண்பன் குறுஞ்செய்தி அனுப்பி இருந்தான், நான் நினைத்தது போல தோழர் அப்படி ஏதும் அனுப்பவில்லை. எப்படியும் மனசு லேசான உடன்  கண்டிப்பாக அனுப்புவார் என தேற்றிக்கொண்டேன்.      பி.பி.இரண்டாம்நாள்:-  இன்று கொஞ்சம் இயல்பான நிலையிலேயே மனது இருப்பதா பட்டது உடனே இந்த பதிவை எழுதிவிட்டேன் எப்போது பதிவாக ஆக்குவேன் என தெரியாது (தெரிந்தபோது  ஒன்பது நாள் ஆகிருந்தது)                                                                           பின்குறிப்பு:-பி.மு-பிரிவுக்கு முன், பி.பி-பிரிவுக்கு பின்