மூலனூரில் எனது வாழ்வியல் முற்றிலும் புதிதானது புதினங்கள் நிறைந்தது. 18 வருடத்தின் வாழ்வியலை தலைகீழாக மாற்றிய ஊர் அது. கொடுமுடியில் இருந்து பழனிக்கு பாதயாத்திரையாக தீர்த்த காவடி எடுத்து செல்வார்கள் 100 கிலோ மீட்டர் தூரம் நடக்கனும் போகின்ற வழிகளில் நிறைய தங்கல்கள் உண்டு.
அங்கு கும்பத்திற்கு ஒருவர் கட்டாயம் காவடி எடுத்தே ஆக வேண்டும். காவடி சந்தா என்று மாதம் மாதம் முருகன்கோவிலில் இருந்து சந்தா வசூளித்து விடுவார்கள். எனது அண்ணனின்(பெரியப்பா மகன்) காவடியை என்னைசுமக்க முடியுமா என்றான். எங்கப்பன் முருகனிடம் அவன் விரும்பினால் மட்டுமே அவனை காண முடியும் என்ற உண்மையை அறியாமலே ஓத்துக்கொண்டேன்.
முதலில் எனக்கான உடை எடுக்க அண்ணன்(நீச்சல் பழக்கியவன்) அழைத்து சென்று வேட்டி,சட்டை,துண்டு,உள்ளாடை முதற்கொண்டு காவியிலேயே வாங்கி தந்தான்.10 நாள் விரதம் தொடங்கியது. முதல் நாள் அதிகாலையிலேயே குளித்து முருகனை நினைத்து பட்டையும்அடித்து காவியுடை அனிந்து கண்ணாடி முன் நின்று எனை பார்த்த நான் இதுவரை கண்டிராத நான் அதுஉள்ளுக்குள் ஏதோ மாற்றங்கள் நிகழ்வதை உணரக்கூடியதாகவே இருந்தது அண்ணன் என்னை பார்த்துவணக்கம் சாமி என்றான் இதையே நேற்று சொல்லி இருந்தால் சிரித்து இருப்பேன் ஏனோ அவ்வாறு தோணாதுஅவனுக்கு வணக்கம் சாமி என தங்குதடையின்றி சொல்ல முடிந்தது.
பூசை அறைக்கு அழைத்து சென்று முருகன் படத்தில் இருந்த மாலைய எடுத்து எனக்கு போட்டு விட்டான். இன்று முதல் வீட்டினுல் போககூடாது,கட்டில்,நாற்காலிகளில் அமர கூடாது,போர்வை கிடையாது.மாற்றுஉடுப்பு கிடையாது முக்கியமாக செருப்பு அனிய கூடாது. இவையனைத்துமே பாதயாத்திரைக்கு நம்மைதயாராக்குவதுதான். தேனீர் கடைகளில் தனியான குவளைகள்தான். அண்ணானு கூப்பிட மூன்று மாதங்களானஎனக்கு சிறு பிள்ளைகளுயும் சாமியென அழைப்பது மிக இலகுவாக இருந்தது.
விரதம் முடிந்ததும் காவடிபக்தர்கள் அனைவரும் மூன்று லாரிகள் மூலமாக விடியும் முன்னரே கொடுமுடி காவேரி ஆற்றின் கரையில் சுமார்250 சாமிகள் குவிந்து இருந்தோம். 10 வயது முதல் 60 வயது வரை ஆண்கள் பெண்கள் என கலவையானகூட்டம் அது. ஏனோ தெரியவில்லை அத்துனைபேரும் ஒரே மாதிரியாக நெடுநாள் பழகியது போல உணர்வுதான்மேலோங்கி இருந்தது. யாத்திரைக்கான நிர்வாக தலைவர் உண்டு உறுப்பினர்களும் உண்டு இவர்கள் வேலைபக்தர்களை ஒழுங்கு படுத்துவது,சாப்பாடு ஏற்பாடு செய்வது.தங்குமிடங்களை தெரிவு செய்வது என சொல்லிக்கொண்டே போகலாம்.
கலசங்களில் காவேரி ஆற்றின் நீர் கொண்டு நிரைத்து வாழை இலையால் கலசத்தைமூடி நாரால் கட்டி அதன் மேல் முருகன் படம் போட்ட துணியாலும் கட்டி இறுதியாக கலசத்தின் கலுத்தில் வடகயிறால் கட்டினோம். கலசத்தை தலையில் வைத்தும்,தோளிலும் சுமந்து செல்ல வட கயிரு பயன் படும்.
எங்கப்பன் முருகனுக்கான யாத்திரை இனிதே தொடங்கியது. முதல் முறை என்பதால் வட கயிரின்இருமுனைகளையும் தோளிர்க்கு அளவாக கட்டி தோளிலே தொங்க விட்டார் தோழர் சாமி. தோழர் சாமி பெயர்வரதன். என்னை விட மூன்று வயது பெரியவர் அண்ணனின் நன்பர். ஒரு ஒரு தலைமை காவடி உண்டு படங்களில்காண்போமே அதே போன்று ஆனால் மிக கனமானது தூக்குவதற்கு லாவகம் வேண்டும். அவர் முன்னால் செல்லமகுடேஷ்வரர் ஆலையத்தில் அவரை தரிசத்த பின் எங்கள் பயணம் முதல் தங்கலை நோக்கி நகர்ந்தது.
இப்போது வயதுக்கு தகுந்தவாறும் வலிமைக்கு தகுந்தவாறும் அணிகளாக பிரிந்து இருந்தோம். நான் வரதனின்அதிவேபடையிலிருந்தேன் எங்களில் மொத்தம் ஐந்து பேர். கடைசியாக கிளம்பி எல்லோருக்கும் முன்னதாகதங்கலை அடைவதே எங்கள் அனியின் சிறப்பாம். கிராமங்கள் வழியாகவே பயணம் இருந்தது. ஐந்து கிலோமீட்டர் நடந்ததும் இளைப்பாருவதற்காக தேனீர் கடை முன்பு துண்டை விரித்து கலசங்களை வைத்த பின்னரேகளைப்பு மூலைக்கு தெரிந்தது. தலை வலித்தது போட்டுக்கொண்ட வீரன் வேடம் யாரிடமும் சொல்ல விடாமல்தடுத்தும் விட்டது. மற்றவர்கள் முகத்தில் அணுவளவும் அயர்ச்சி இல்லாது வியப்புதான் எனக்கு. ஒரு மாதிரியாகமுதல் தங்கலை வந்தடைந்தோம்.
உடம்பில் அத்துனை உறப்பும் வஞ்சனை இல்லாது வலித்தது. வரதன்என்னிடம் எதுவும் வினவாமல் கை கால் உடம்பு என மிக லாவகமாக பிடித்தவர் தலையை தொட்டவர் எப்போது இருந்து தலைவலி என வினவிய கணம் அன்பு அழுகையாக வெடித்தது 18 வயது முரடனுக்கு அழுகை வருமா? வரும். 17 கி.மீ நடையில் உடல் வலித்த வலிக்கு எப்படி இலக்கை சென்றடைவேன் என்ற பயத்தில்இருந்தவனை வரதனின் இந்த வார்த்தைகள் அம்மா வை அவரில் பார்க்க வைத்தது அதுதான் அழுகைக்குகாரணம். என்ன சாமி சின்ன பிள்ள மாதிரி இதுலாம் ஒன்னுமில்ல முதல் முறையாக நடப்பவர்களுக்கு வலமைதான் என்று என்னை சமாதன படுத்திக்கொண்டே தலையை பிடித்து விட்டுக்கொண்டு இருந்தார். அவர்பிடித்தலில் ஒரு நேர்த்தியும் அக்கரையும் இருந்தது. எனக்காக தேனீர் எடுத்து வந்தார். எனது அயர்ச்சிமொத்தமாக தீர்ந்தது போல் இருந்தது.
அடுத்த நாள் அதிகாலை மீண்டும் பயணம் தொடங்கியது. இன்று எங்கள்அனியில் ஐந்து பெண் சாமிக்களும் இணைந்து இருந்தனர். எங்கள் ஒரே அணி ஐந்து உள் அணியாக பிரிந்துபேசிக்கொண்டே நடந்தோம். எனது தோழி சாமி எனது நிலையை கணக்கில் கொண்டு பல நேரங்களில் எனதுகலசங்களையுமே சேர்ந்து சுமந்தவராக என்னையும் ஊக்குவித்து வழி நடத்தினார். இயல்பான கொங்கு தமிழ்அவருடையது மிக அழகாக இருக்கும் அவரை போலவே. காவி தரித்தால் என்னவோ தெரியவில்லை பெண்ணாக தனித்து தெரியவில்லை. அடுத்து வந்த நாட்களில் தோழி சாமியிடம் ஒரு சோர்வை உணர முடிந்தது இப்போதுநான் தேறிவிட்டேன் உடம்பு பழகிவிட்டது எனவே தோழி சாமியை கவணமாக பார்த்து கொண்டேன்.
புளியம்பட்டியில் அய்யனார் கோவிலில் ஒரு தங்கல் உண்டு. அது கொஞ்சம் பிரசித்து பெற்றது. ஏனெனில் அங்குசாமியாடி குறி சொன்னால் 100% பலிக்கும். இன்னொரு சிறப்பு யார்மேல் சாமி வரும் என்பதும் தெரியாது. தப்பின் வேகமும் குலவையின் வேகமும் அதிகரிக்க எங்கள் ஐவரனி சுற்றம் முற்றும் யாருக்கு சாமி வருமென்று தேடினோம். ஏனெனில் அவரை கட்டுபடுத்தி சாமி ஆட வைக்க வேண்டும். அரோகரா ஒலியின் அளவும்அதிகரிக்க எனக்கு முன் இருந்த சாமியின் மூச்சு காற்றின் ஒலி அதிகமானது சுதாரிப்பதற்குள் துள்ளினார் மான்போல வேகமாக நானும் வரதன் சாமியும் அவரின் இரு கைகளையும் பிடித்து கொண்டோம். நினைத்தது போலஅவ்வளவு எளிதானதாக இருக்கவில்லை அவரை பிடிப்பது. திமிறினார் காளை போல நான் பற்றி இருந்தஇடங்களில் அவரது நரம்புகள் இரும்பு கம்பிகளாக உணரக்கிடைத்தது. எனது அரோகரா சத்தத்தின் அளவும்அதிகரித்து எனது உடம்பிலும் மனதிலும் அடைந்த பரவசத்தில் எங்கப்பன் முருகனை என்னுள்உணரக்கிடைத்தது. என் வாழ்க்கையில் முதல் முதலாக இறைவனை உணர்ந்த தருணம் அது.
இதோ வந்து விட்டோம் பழனி அடிவாரத்திற்கு. மடத்தில் தங்கி அடுத்தநாள் மலையேறினோம். கோவிலின்பிரகாரக்தில் அணைவரின் கலசங்களும் காட்சி படுத்த பட்டது. 10 நாள் பயணத்தில் கலசங்களின் நீரின்அளவுகளை கொண்டு அந்த வருடத்தின் பலன்களை கணித்துக்கொள்ள முடியும். வரிசையில் நின்று இதோஎங்கப்பன் முருகன் முன் நிற்கிறேன் பித்து பிடித்த நிலை அது எப்படி விவரிக்கவென்று தெரியவில்லை முடிந்தால் அனுபவித்து பாருங்கள் புரியும். எல்லாம் முடிந்து உள் பிரகாரத்தில் வந்தமர்ந்து கோபுரத்தை பார்த்தவண்ணமாக இருந்தேன் இதயம் இழகி கண்ணீர் தாரை தாரையாக கொட்டியது.
அரகரா அரகரா அரோகரா.🙏



