புதன், 13 மே, 2020

அப்பா நடராசன்(V.N.Rasan)


  1. அப்பாவை பற்றிய முதல் நியாபகமாக 
  2. அவருடன் அரை தூக்கத்தில் மிதிவண்டியின் 
  3. பின் அமர்ந்து அதிகாலைஐந்து மனிக்கு 
  4. அவருடைய தையல்கடைக்கு செல்வது பிடிக்கும்
  5. இரண்டு காரணம் உண்டுஒன்று மிதிவண்டிபயணம் 
  6. மற்றது காஜா கடை தேனீரும் சூடான 
  7. பணியாரமும்தான் பல் துளக்காமல் சாப்பிடுவது இன்னும்பிடிக்கும்

  8. நல்ல பக்திமான்நெற்றியில் பட்டை இல்லாமல் 
  9. அப்பாவை காண்பது கடிணம்.நானுமே 
  10. பத்தாவதுபடிக்கும் வரை பட்டையடித்தே 
  11. பள்ளிக்கு போவேன்பட்டைமேல் உள்ள 
  12. விருப்பத்தை விட அப்பா மீது அன்புஅதிகம்

  13. அப்பா எனக்கு வைத்த செல்ல பெயர்
  14.  “ராகுகாலம்”. மூன்று அக்கா(அம்மா)விற்கு 
  15. பிறகு கடைசியாகபிறந்ததால் செல்லம் 
  16. அதிகம்.அப்பா பாசத்தை அதிகம் காட்டி 
  17. கொள்ள மாட்டார்.ஆனால் வீடு 
  18. நுழைந்ததும்எங்கே அந்த ராகுகாலத்தை 
  19. கானோம் என்பார்.

  20. சின்ன வயதில் நிறைய சேட்டைகள் 
  21. பன்னுவேன் விளைவு அப்பாஅடிக்க 
  22. துரத்துவார் கனத்தில் ஓட்டு கூரையின் 
  23. மேலே ஏறிக்கொள்வேன் அவரின் 
  24. ஒவ்வொரு திட்டிற்கும் ஒருஓடை 
  25. உடைப்பேன் வேறு வழி இல்லாமல் 
  26. இன்னும் திட்டினால் செலவு கூடும் 
  27. என்று விட்டு விடுவார் வழக்கம்போல 
  28. சமாதான புறா அம்மா மூலம் 
  29. ஓட்டிற்கான பைசாவையும் வாங்கி 
  30. நானே ஓட்டையும் மாற்றி விடுவேன் 
  31. ஓடுமாட்டுவதற்கு தனியே காசும் 
  32. வாங்கி கொள்வேன்

  33. எனது பதிமூன்று வயதில் ஒரு முறை 
  34. அப்பாவிடம் வசமாகமாட்டி கொண்டேன் 
  35. அடியின் வலி தாங்க முடியவில்லை
  36. (அவ்வளவாக அடி வாங்கி பழக்கமும் இல்லைஎனக்குகோபத்தில் செய்வதறியாமல் 
  37. பக்கத்தில் இருந்த விறகு கட்டையை 
  38. எடுத்து கொண்டு இன்னொரு அடி அடிச்ச 
  39. மன்டையை உடைப்பேன்(அப்பா அம்மா 
  40. நான் மட்டும் அடிக்கடி மகூபா தியேட்டரில் 
  41. படம் பார்த்த விளைவாகஇருக்கலாம்
  42. என்றேன் அப்பா என்னை ஒரு முறை 
  43. உற்றுப்பார்த்தார் இன்று வரை என்னால் 
  44. அந்த பார்வைக்கானஅர்த்தத்தை கண்டுபிடிக்க முடியவில்லை

  45. அன்று முதல் அவர் வாழ்வின் இறுதிவரை 
  46. அடிக்கவும் இல்லை திட்டவும்இல்லை.
  47. இரண்டு அல்லது மூன்று நாட்கள் அப்பா 
  48. என்னுடன் பேசவில்லை பார்வையிலும் 
  49. வெருப்பு இருக்காதுஎனக்குள் பல கேள்விகள் 
  50. அடித்து இருந்தாலும் அன்றோடு மறந்து 
  51. இருப்பேன் அப்பா பேசாமல் இருந்ததுநிறைய 
  52. வலித்தது அப்பா அடிக்காக பயப்படும் நான் 
  53. முதல்முறையாக அடிக்காததற்கு பயந்து சமதான புறாவிடம்தூது போக சொன்னேன் புறாவிற்கு 
  54. பயமா விருப்பம் இல்லையா என தெரியவில்லை 
  55. முடியாது என்றது. 

  56. முடிவுசெய்துவிட்டேன் 
  57. நானே அப்பாவிடம் மன்னிப்பு கேட்பதாக
  58. பள்ளி முடிந்ததும் நேராக அப்பா கடைக்குசென்றேன்.தைத்து கொண்டிருந்தவர் 
  59. வீட்டுக்கு போகலயா ஏதும் வேனுமா என்றார்
  60. வார்த்தை வரவில்லைஅழுகைதான் வந்தது 
  61. அப்பா பதட்டப்படாமல் உள்ள வா என்று 
  62. கடைக்குள் அமர வைத்து நான் 
  63. அழுதுமுடித்தவுடன் காஜா கடைக்கு போவோமா 
  64. என்றார் அத்துனையும் மறந்து வேகமாக 
  65. தலையாட்டினேன்.

  66. அன்றுமுதல் எனக்கு 
  67. தோழனாக என்னை வழி நடத்தினார்
  68. தாத்தா அப்பா பெரியப்பா என அணைவரும் கம்யூனிஸ்ட்என்பதால் கடையில் நிறைய 
  69. புத்தகங்கள் வைத்து இருப்பார் படிக்க 
  70. சொன்னது இல்லை நானாக நிறையபுத்தகங்கள் 
  71. படித்து உள்ளேன்

  72. பள்ளிக்காக ஏதாவது பணம் கேட்டால் உடனே 
  73. தரமாட்டார் நாளை வாங்கிகொள் என்பார். பைகாசு(பாக்கெட் மனிகேட்டால் 
  74. சாப்பாட்டு இடை வேலைக்கு அவர்வீடு சென்ற 
  75. பிறகு கடையில் உட்கார்ந்து ஏதாவது வேலை 
  76. செய்தால் மட்டுமே காசு தருவார்உழைப்பின்
  77. உன்னதத்தை பயிற்றுவித்த ஆசான் அவர்.

  78. என்மேல் நிறைய நம்பிக்கை உண்டு 
  79. நான் தவறு செய்யவே மாட்டேன்என்ற அளவிற்கு 
  80. நம்பினார் அதுபோலயே நானும் இருக்கிறேன் 
  81. இறுதிவரையும் இருப்பேன் என்றே நம்புகிறேன்.
  • இன்னும் இன்னும் அவரை பற்றி எழுதனும் எழுதுவேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக