திங்கள், 12 ஏப்ரல், 2010
மெய்ப்பொருள் காண்பதறிவு.
சமீப காலமாக, ஏன் நெடுங்காலம் என்றே சொல்லலாம். சாமியார்கள் பற்றிய செய்திகளும் அதைத்தொடர்ந்த விவாதங்கள் பற்றி தெரிந்ததை எழுத தோன்றிய பொது மூன்று நாட்களாக தலைப்பே கிடைக்காமல் திணறிய பொது வள்ளுவர்தான் துணையாக வந்தார்.முதலில் தனிப்பட்ட ஒரு மதத்துக்கு உரிய தனிப்பட்ட ஒரு பிரச்சினையாக பார்க்காமல் பொதுவான பிரச்சினையாகவே இதை பார்ப்போம். ஏன் என்றால் எல்ல மதத்திலும் நம்பியவர்களை இறை பயத்தை காட்டி தங்களின் சுய விருப்பங்களை நிறைவேற்றி கொள்ளும் கூட்டம் இருந்து கொண்டுதான் உள்ளது. ஏன் இவர்களிடம் மட்டும் படித்த,படிக்காத என்ற பேதம் இன்றி மக்கள் கூட்டம் கூட்டமாக ஏமாறுகிறார்கள்..? யோசித்து பார்த்ததில் இவ்வாறு ஏமாறுபவர்கள் ஒழுங்கான இறை நம்பிக்கை அற்றவர்கலாவே இருக்க கூடும். நவீனத்துவம் என்ற பெயரில் புதுமையை விரும்பும் ,நம் மக்களின் மனதின் வேட்கையை சரியாக புரிந்துகொண்டு, அவர்களை விட சற்று அதிகமாக சிந்தித்து மக்களை ஏமாற்றுகிறார்கள். ஏலம் போட்டு ஆன்மிகம் என்ற பெயரில் கூவி, கூவி விற்கிறார்கள். படித்தவர்கள் மட்டும் விதிவிலக்கா என்ன..? அவர்களும் தாங்கள் அதி மேதாவி என்று வேறுபடுத்திக்காட்ட இந்த சாமியார்களை பயன்படுத்திக் கொள்கிறார்கள், உண்மையில் இவர்களின் இந்த எண்ணத்தை சாமியார்கள் பயன்படுத்திகொள்கிறார்கள். சாமியார்களிடம் சரணடைந்த கூமுட்டைகளுக்கு பாதியிலேயே சாமியார்களின் சுயரூபம் தெரிந்தாலும், அதிமேதாவி என போட்டுக்கொண்ட முகமூடி கிழிந்து விடும் என்ற பயத்தில் தாங்கள் ஏமாற்ற பட்டதை வெளியில் கூறுவதும் இல்லை. இந்த விசயத்தில் யார் மீது தவறு....? எங்கு ஆரம்பிக்கிறது..? ஆன்மீகத்திலா, இல்லை (ஆ)சாமிகளிடமா..?, இல்லை ம(மா)க்களிடமா?. ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். எமாற்றுபவருக்கு அது ஒரு தொழில், தனது வாடிக்கையாளராக ம(மா)க்களை பயன்படுத்துகிறான். பொருள் சரியில்லை என்றால்,காய்கறி விற்பவரிடம் கட்டும் கோபத்தை இந்த ஆன்மீக வியாபாரிகளிடம் காட்டினால் போதும், இதுமாதிரி விஷயங்கள் வரும் காலத்தில் குறையும் எனபது என் நம்பிக்கை.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக